​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில் குற்றாலத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..

Published : May 19, 2024 6:16 AM

தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில் குற்றாலத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..

May 19, 2024 6:16 AM

தென்காசி மாவட்டத்துக்கான வானிலை ஆய்வு மையத்தின்மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து குற்றால அருவிப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்துக்கு 19,20 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட்டும் 21,22 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.