​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான +2 தேர்வில் தேசிய அளவில் சாதித்த மாணவி.. உதவியாளர் துணை இன்றி மடிக்கணினி மூலம் சாதனை

Published : May 18, 2024 9:58 PM

பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான +2 தேர்வில் தேசிய அளவில் சாதித்த மாணவி.. உதவியாளர் துணை இன்றி மடிக்கணினி மூலம் சாதனை

May 18, 2024 9:58 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவியாளர் துணை இன்றி மடிக்கணினி வாயிலாக 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வெழுதிய பார்வை குறைபாடுள்ள மாணவி ஒருவர், தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.

பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். மருதூர்குறிச்சியை சேர்ந்த எட்வின்ஜோஸ் - ஜெபசிலின் விஜிலா தம்பதியின் மகள் ஏஞ்சலின் லிப்பிகாவுக்கு சிறுவயதில் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டு படிப்படியாக பார்வை திறனை இழந்துள்ளார். அனைத்து மாணவர்களும் படிக்கும் பள்ளியிலேயே படித்த அவர் மடிக்கணினி மூலம் தேர்வெழுதி 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.