​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ரயிலுக்கு காத்திருந்த இளைஞரை இருப்புப் பாதை போலீசார் தாக்கியதாக புகார்

Published : May 18, 2024 9:17 AM

சென்னையில் ரயிலுக்கு காத்திருந்த இளைஞரை இருப்புப் பாதை போலீசார் தாக்கியதாக புகார்

May 18, 2024 9:17 AM

சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலைத்தில் ரயிலுக்காக காத்திருந்த தம்மை இருப்புப் பாதை போலீசார் பிடித்துச் சென்று அடித்து சித்ரவதை செய்ததாக ஐ.சி.எப். நிறுவன ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றும் இளைஞர் வசந்தகுமார் தெரிவித்தார்.

வழக்கம்போல பணிக்கு ரயிலில் சென்ற அவர், சரியான நேரத்துக்கு செல்ல முடியாததால் விடுப்பு எடுத்துக் கொண்டு ஆவடியில் உள்ள நண்பரை பார்க்க சென்றதாக கூறினார். பின்னர், வீடு திரும்புவதற்காக ஆவடி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது போலீசார் தன்னை பிடித்துச் சென்றதாக வசந்தகுமார் தெரிவித்தார்.