​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி R15பைக், 3 சவரன் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

Published : May 14, 2024 12:31 PM

இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி R15பைக், 3 சவரன் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

May 14, 2024 12:31 PM

குண்டர் சட்டத்தில் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த 15 நாட்களில் யமஹா ஆர்.15 பைக்கை திருடிக் கொண்டு தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 21 வயது நபரையும், அவரது கூட்டாளிகளாக 20 மற்றும் 22 வயது இளைஞர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜூ என்ற இளைஞர் கடந்த 9-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு இ.சி.ஆரில் நடந்து சென்ற போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் ராஜூவின் தங்கச் சங்கிலி, வீட்டுச் சாவி உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.

ராஜூ அளித்த புகாரின் பேரில் அப்பகுதி சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயதான நிஜாமுதீன், 20 வயதான கொட்டிவாக்கம் ஆனந்தன், 22 வயதான கண்ணகி நகர் அப்பு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதில் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து விட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிஜாமுதீன், தமது கூட்டாளிகளுடன் மெரீனா, நீலாங்கரை, கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் கத்தி முனையில் பணம், நகை, செல்போன் பறித்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.