​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காலணி கடை, உணவகத்திற்குள் நுழைந்து மாமூல் கேட்டு மிரட்டல்... கடை உரிமையாளர்கள், ஊழியரை கத்தியால் வெட்டிய 6 பேர் கும்பல்

Published : May 14, 2024 12:13 PM

காலணி கடை, உணவகத்திற்குள் நுழைந்து மாமூல் கேட்டு மிரட்டல்... கடை உரிமையாளர்கள், ஊழியரை கத்தியால் வெட்டிய 6 பேர் கும்பல்

May 14, 2024 12:13 PM

சென்னை வண்ணாரப்பேட்டையில் மாமூல் கேட்டு கடை உரிமையாளர்களை கத்தியால் வெட்டிய 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அங்குள்ள ஜே.பி. கோயில் தெருவில் உள்ள காலணியக கடை ஒன்றுக்குள் குடி போதையில் புகுந்த அந்த 6 பேர் கொண்ட கும்பல், மாமூல் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் கடை உரிமையாளரின் தலை, கைகளில் வெட்டிவிட்டு, கடை ஊழியரின் வயிற்றில் குத்தியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சாலையில் இருந்தவர்களை கத்தியை காட்டி தாக்கிய அந்த கும்பல், அருகே ராமானுஜம் தெருவில் உள்ள உட்லண்ஸ் உணவகத்தின் உள்ளே நுழைந்து, அந்த கடையின் உரிமையாளர் பஷீர் அஹமதுவையும் மாமூல் தர மறுத்ததால் வெட்டி விட்டு ஓடியதாக வழக்குப்பதிந்துள்ள போலீசார், சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் அந்த கும்பலை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.