திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த போலீஸ்காரர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு மசாலா பொருள்களை ஏற்றிவந்த சரக்கு வேனின் ஓட்டுநர், ஜக்காம்பேட்டை அய்யனார் கோவிலில் சாமி கும்பிட சாலையோரம் திடீரென்று நிறுத்த முயன்றபோது பின்னால் வந்த கார் வேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது.