தென்காசி மாவட்டம் பிரானூர் பார்டர் பகுதியில், சாலையின் குறுக்கே இண்டர்நெட் வயர் தாழ்வாகத் தொங்கியதைப் பார்த்து சடன் பிரேக் அடித்த இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண், சறுக்கிக் கொண்டு கீழே விழுந்து காயமடைந்தார்.
சற்று நேரத்தில் எதிர் திசையில் வந்த ஆட்டோ அதே வயரில் சிக்கி சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்தனர்.