கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மனப்புத்தூரில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த கவினா என்ற 3 வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்தது.
தன்னைக் குளவி கடித்துவிட்டதாக அழுதுகொண்டே வந்து தாயிடம் கூறிய குழந்தை, சிறிது நேரத்தில் மயக்கமடைந்திருக்கிறார்.
அவரது கையில் பாம்பு கடித்ததற்கான தடயத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற நிலையில், கவினாவின் உயிர் வழியிலேயே பிரிந்தது.