​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடு முழுவதும் 557 நகரங்களில் ஒரே நேரத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு..!

Published : May 05, 2024 8:19 PM

நாடு முழுவதும் 557 நகரங்களில் ஒரே நேரத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு..!

May 05, 2024 8:19 PM

நாடு முழுவதும் 557 நகரங்களில் ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடந்து முடிந்தது. தேசிய தேர்வு முகமை நடத்திய இத்தேர்வு பிற்பகல் 2 மணிக்கு துவங்கி 5-20 மணி வரை நடத்தப்பட்டது.

நடு முழுவதும் 24 லட்சம் பேர் தேர்வை எழுதினர். சென்னையில் 24 ஆயிரம் உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வில் பங்கேற்றனர்.

அடையாள அட்டைகளை சரி பார்த்து, முழுமையான சோதனைக்குப் பின் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேர்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர்.