​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் சிறையில் அடைப்பு

Published : May 05, 2024 12:41 PM

தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் சிறையில் அடைப்பு

May 05, 2024 12:41 PM

சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து 7 மாத குழந்தை உயிரிழக்கக் காரணமான செவிலியர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தி. நகர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா என்ற அந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 30-ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முதலில் குழந்தையின் கால்கள் வெளியே வந்ததாகவும் அவற்றை வெளியே இழுக்க முயன்றதால் அவை கையோடு பிய்ந்து குழந்தை இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட அதீத ரத்தப்போக்கால் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வினிஷா குணமானதை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.