​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 17- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Published : May 05, 2024 7:24 AM

கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 17- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

May 05, 2024 7:24 AM

கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை 17-ஆம் தேதி வரை காவலில் வைக்க கோவை ஜே.எம்.1-வது நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து அவரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சவுக்கு சங்கரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது அங்கு திரண்டிருந்த திமுக மகளிர் அணியினர், பெண் வழக்கறிஞர்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து தம்மீது பொய் வழக்கு போடப்படுவதாக சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டி முழக்கமிட்டார்.