சென்னை அசோக்நகரில் மாநகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் கவனத்தை திசை திருப்பி 18 சவரன் நகையைத் திருடிய ஆந்திர மாநில பெண் கைது செய்யப்பட்டார்.
எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் கடந்த 23ஆம் தேதி 18 சவரன் நகை அடங்கிய பையுடன்கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் நோக்கி பேருந்தில் சென்றுள்ளார்.
அசோக் நகர் அருகே பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் தனது மணி பர்சை எடுத்தபோது, அதிலிருந்து சில்லறைகள் கீழே சிதறியுள்ளன.
உதவும் நோக்குடன்ராஜலட்சுமி அவற்றை சேகரித்து அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் உடனடியாக இறங்கியுள்ளார்.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ராஜலட்சுமி இறங்கியபோது, நகைப் பையைக் காணாமல் அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்தார்.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, ஆந்திராவைச் சேர்ந்த விமலா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்த விமலா, முதல்முறையாக தற்போதுதான் சிக்குவதாகக் கூறியுள்ளார்.