வருமான வரித்துறை போர்டை மாட்டிக்கொண்டு 2 ஆண்டுகளாக இன்சூரன்ஸ், எஃப்.சி. இல்லாமல் வெள்ளை பதிவெண் பலகையுடன் சென்னையில் சுற்றி வந்த டி-போர்டு வாடகைக் காரைப் பிடித்து போக்குவரத்துப் போலீசார் அபராதம் விதித்தனர்.
ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் அருகே சோதனை நடத்திய போக்குவரத்து போலீசார், குறிப்பிட்ட அந்த காரை நிறுத்தி ஆவணங்களை கேட்ட போது, ஓட்டுநர் எந்த பேப்பரையும் காட்டாமல் நின்றதால் சந்தேகமுற்று இ-பரிவார் மிஷினில் சோதித்த போது, முறைகேடுகள் குறித்த தகவல்கள் தெரியவந்ததாகவும், தெரிவித்தனர்.
விமான நிலையம் போன்ற இடங்களில் மஞ்சள் பதிவெண் பலகை வாகனங்களை அனுமதிக்காததால் வெள்ளை போர்டை மாட்டிக் கொண்டு ஓட்டியதாகவும், இதேபோல பல நூறு வாகனங்கள் சென்னையில் இயங்குவதாகவும் காரின் ஓட்டுநர் தெரிவித்தார்.