உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் சனிக்கிழமை கனமழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது..
நீலகிரி மலைத்தொடரின் அடிவார பகுதியான கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பின் மழை பெய்தது. சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டம் கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி போன்ற இடங்களிலும் மிதமான மழை பெய்ததது.