தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்.. இடுப்பளவு நீருள்ள கிணற்றில் குதித்தவரை பிடித்த போலீஸ்..!
Published : May 04, 2024 6:13 PM
தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்.. இடுப்பளவு நீருள்ள கிணற்றில் குதித்தவரை பிடித்த போலீஸ்..!
May 04, 2024 6:13 PM
புதுக்கோட்டை கீழக்குறிச்சியில் சொத்தை உடனடியாக பிரித்துத் தருமாறு கேட்டு தந்தையை தலையில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி இடுப்பளவே தண்ணீர் உள்ள கிணற்றில் குதித்த நபரை கயிறு கட்டி மேலே இழுத்து போலீசார் கைது செய்தனர்.
கொல்லப்பட்ட கணேசன் என்ற விவசாயிக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், மூத்த மகனான கூலித் தொழிலாளி விநோத் குமார் தனது சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டு இதற்கு முன்பும் பல முறை தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில் தந்தையை விநோத் குமார் அடித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.