சென்னை அருகே கடலில் சிக்கி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவரை காப்பாற்ற முயன்ற மினவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
சந்தோஷ் குமார் என்பவரும், அவரது நண்பரும் திருவெற்றியூர் ஒன்டி குப்பம் அருகே கடலில் குளித்துள்ளனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி சந்தோஷ் குமார் கூச்சலிட்டதை கேட்டு முரளி என்ற மீனவர் அவரை நோக்கி நீந்தி சென்றுள்ளார்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட முரளி கடலில் மூழ்கி உயிரிழந்தார். இதற்கிடையே பைபர் படகில் சென்ற மீனவர்களால் கல்லூரி மாணவர் சந்தோஷ் காப்பற்றப்பட்டார்.