​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்துக்காக கணவனை சங்கிலியால் கட்டி அடித்து சித்ரவதை செய்த மனைவி.. தன் பெயரில் எழுதிக் கொடுக்கவில்லை என்பதால் ஆத்திரம்..!

Published : May 04, 2024 3:13 PM



சொத்துக்காக கணவனை சங்கிலியால் கட்டி அடித்து சித்ரவதை செய்த மனைவி.. தன் பெயரில் எழுதிக் கொடுக்கவில்லை என்பதால் ஆத்திரம்..!

May 04, 2024 3:13 PM

தெலங்கானாவில் சொத்துக்காக கணவனை சங்கிலியால் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கணவர் பெயரிலான வீட்டுமனையை எழுதி தருமாறு மனைவி கூறியதால் ஏற்பட்ட தகராறில், அந்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 2 மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை, உறவினர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்த அவரது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு, அவரது மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.