தெலங்கானாவில் சொத்துக்காக கணவனை சங்கிலியால் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கணவர் பெயரிலான வீட்டுமனையை எழுதி தருமாறு மனைவி கூறியதால் ஏற்பட்ட தகராறில், அந்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 2 மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை, உறவினர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்த அவரது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு, அவரது மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.