காணவில்லை எனத் தேடப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், அவரது சொந்த ஊரான கரைச்சுத்துபுதூரில் வீட்டுத் தோட்டத்தில், கை, கால்கள் கட்டப்பட்டு, எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆம் தேதி வெளியில் சென்ற ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை என கூறப்பட்ட நிலையில், தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயக்குமாரை யாராவது கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனரா? உள்ளிட்ட கோணங்களில் விசாரிப்பதாக நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.