​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குருவியாக செயலபட்டவரை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்

Published : May 04, 2024 6:15 AM

குருவியாக செயலபட்டவரை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்

May 04, 2024 6:15 AM

வெளிநாட்டுக்கு சென்று விலை உயர்ந்த பொருள்களை கடத்தி வந்து பர்மா பஜாரில் வியாபாரிகளுக்கு சப்ளை செய்யும் குருவியாக செயல்பட்டு வரும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பவரை கடத்தி 2 கோடி ரூபாய் பணம் கேட்டு அவரது மனைவிக்கு மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் ஷாகுல் செல்போன் எண்ணை ஆய்வு செய்து கடத்தல்காரர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருப்பதை கண்டு பிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.