​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் போக்குவரத்துக் காவலர்களிடம் விசாரணை

Published : May 03, 2024 7:49 PM

சென்னையில் காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் போக்குவரத்துக் காவலர்களிடம் விசாரணை

May 03, 2024 7:49 PM

சென்னை பட்டினம்பாக்கம் அருகே காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளர் மணிவண்ணன் என்பவரை மது போதையில் தாக்கிய சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், சுடலையாண்டி, அவரது மகன் கார்த்திக் ராஜா என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.