​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2040ல் இந்தியரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டம் - முன்னாள் தலைவர் சிவன்

Published : May 03, 2024 7:29 PM

2040ல் இந்தியரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டம் - முன்னாள் தலைவர் சிவன்

May 03, 2024 7:29 PM

2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைப்பதிலும், 2040-ஆம் ஆண்டில் இந்தியர் ஒருவரை நிலவில் இறக்கும் திட்டத்திலும் இஸ்ரோ அமைப்பு தீவிரம் காட்டி வருவதாக அதன் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வருகை தந்த அவர், விண்ணிற்கு மனிதனை அனுப்பி திருப்பி பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் பங்கேற்க உள்ளவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.