​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் மேம்பாலத்தின் அடியில் கிடந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள்... மூவரும் யார்? கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

Published : May 03, 2024 3:39 PM

சேலம் மேம்பாலத்தின் அடியில் கிடந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள்... மூவரும் யார்? கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

May 03, 2024 3:39 PM

 மேட்டூர் அருகே ஜலகண்டபுரம் மேம்பாலம் அடியில் பெண் உட்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேம்பாலம் அடியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போய் பார்த்த போது, சுமார் 50 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணின் சடலமும் அருகில் ஒரு மொபட்டும் இருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் சடலங்களை கைப்பற்றிய, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த 3 பேரும் யார்? எதற்காக இங்கு வந்தார்கள்? கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.