​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சாரம் தாக்கப்பட்ட உறவினரை காப்பாற்ற சென்றவர் பலி... மின்சாரம் தாக்கியவரை காப்பாற்றும்போது விழிப்புணர்வு அவசியம் !

Published : May 03, 2024 3:16 PM

மின்சாரம் தாக்கப்பட்ட உறவினரை காப்பாற்ற சென்றவர் பலி... மின்சாரம் தாக்கியவரை காப்பாற்றும்போது விழிப்புணர்வு அவசியம் !

May 03, 2024 3:16 PM

திருத்தணி அருகே மேல்முருகம்பட்டு கிராமத்தில் மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்த பம்ப் ஆபரேட்டர் சேட்டு என்பவரை காப்பாற்றச் சென்ற அவரது உறவினர் அருள் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த சேட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மின்சாரம் பாய்ந்த ஒருவரை காப்பாற்ற முயன்றால், சம்பந்தப்பட்டவரை கையால் நேரடியாக தொடாமல், மரக்கட்டை, தடிமனான குச்சிகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட மின்சாரத்தை கடத்தாத பொருட்களை பயன்படுத்தி காப்பாற்ற வேண்டும்.