​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் பெற்றோரால் கைவிடப்பட்ட பேரனை அரவணைத்து வளர்த்த தாத்தாக்கு நேர்ந்த விபரீதம்

Published : May 03, 2024 2:39 PM

திருப்பூரில் பெற்றோரால் கைவிடப்பட்ட பேரனை அரவணைத்து வளர்த்த தாத்தாக்கு நேர்ந்த விபரீதம்

May 03, 2024 2:39 PM

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மகனும், மருமகளும் பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டதால் தனித்துவிடப்பட்ட பேரனை அரவணைத்து வளர்த்த தாத்தாவை, மதுபோதைக்கு அடிமையான அந்த பேரனே அடித்து கொலை செய்தார்.

நகையூர் பகுதியில் வசித்த முனியப்பன், ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் பழகியதால் பேரன் அருண்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் முனியப்பனின் கைத்தடியை பிடுங்கி அருண்குமார் தாக்கியதால் மயங்கி விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.