​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புவனகிரி அருகே தொடரும் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

Published : May 03, 2024 10:04 AM

புவனகிரி அருகே தொடரும் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

May 03, 2024 10:04 AM

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூவாலை கிராமத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது தெற்குதிட்டை பகுதியில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் பயணிக்கு காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்ட நிலையில், கல்வீசி விட்டு தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே வடக்குதிட்டை பகுதியில் நடந்த கல்வீச்சில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இரண்டாவது நாளாக மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.