பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை இயக்கப்பட்டுவந்த பாசஞ்சர் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலையை அடையும் எனவும், பின்னர் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9:50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான பயன கட்டணம் 50 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.