​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4கோடி பிடிபட்ட விவகாரம்

Published : May 03, 2024 9:38 AM

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4கோடி பிடிபட்ட விவகாரம்

May 03, 2024 9:38 AM

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உள்ளிட்ட இருவரிடம் சிபிசிஐடி போலீசார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இருவரிடமும் தனித் தனியாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு அவர்கள் இருவரையும்  வீட்டிற்கு செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.

விசாரணையின் அடுத்த கட்டமாக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளித்து விசாரிக்க போலீசார்  திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.