​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பல நாட்களாக குழாயில் தண்ணீர் வரவில்லை என மக்கள் புகார்

Published : May 03, 2024 9:29 AM

பல நாட்களாக குழாயில் தண்ணீர் வரவில்லை என மக்கள் புகார்

May 03, 2024 9:29 AM

சென்னை அண்ணாநகர் அருகே திருமங்கலத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் பல நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக்கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடந்த மறியலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.