நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மர்ம நபர்களால் கூலி தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற பழனிவேலின் உடல் கத்தியால் குத்திய நிலையில் இரயில்வே பாலம் அருகே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த கொலை பணத்திற்காக நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.