மதுரை விமான நிலையத்திலிருந்து நேற்று துபாய்க்கு சென்ற பயணிகள்100 பேரின் உடமைகள் இன்று அனுப்பி வைப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவிப்பால் பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
192 பயணிகளுடன் மதுரையில் இருந்து நேற்று துபாய்க்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அதிக எடை காரணமாக 92 பயணிகளின் உடைமைகள் மட்டுமே ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் எஞ்சிய 100 பயணிகள் துபாய் சென்றடைந்தும், உடைமைகள் இல்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.