ஃபார்முலா ஒன் சாம்பியன் அயர்டன் சென்னாவின் 30ஆவது நினைவு தினம்...
Published : May 02, 2024 4:59 PM
மூன்று முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் கார் பந்தய வீரர் அயர்டன் சென்னாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த ஃபார்முலா ஒன் சாம்பியன் போட்டியின்போது விபத்தில் சிக்கி, அயர்டன் சென்னா உயிர் நீத்த இடத்தில் கூடிய கார் பந்தய வீரர்கள் மற்றும் ரசிகர்கள், மலர் வளையம், பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினர்
கார் பந்தயம் நடத்தப்படும் இமோலா பாதையில் அமைக்கப்பட்டுள்ள அயர்டன் சென்னாவின் நினைவுச் சின்னம் முன்பு ரசிகர்கள் திரண்டு கண்ணீர் சிந்தினர். பந்தய பாதையில் நடந்து சென்றும் அயர்டன் சென்னாவை நினைவுகூர்ந்தனர்.