​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாமக்கலில் சாலை விபத்தில் பெண் தலைமைக் காவலர் சம்பவ இடத்திலேயே பலி

Published : May 02, 2024 2:31 PM

நாமக்கலில் சாலை விபத்தில் பெண் தலைமைக் காவலர் சம்பவ இடத்திலேயே பலி

May 02, 2024 2:31 PM

ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நாமகிரிப்பேட்டை பெண் தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

புதன்கிழமை இரவு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அமுதா எதிரே வந்த ஈச்சர் வாகனத்தின் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமுதாவின் உடலை பார்த்து சக பெண் காவலர்கள் கதறி அழுதனர்..