​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டில் தனியே இருந்து சிறுமியை திசை திருப்பி கேழ்வரகு மூட்டையை திருட முயற்சி

Published : May 02, 2024 6:31 AM

வீட்டில் தனியே இருந்து சிறுமியை திசை திருப்பி கேழ்வரகு மூட்டையை திருட முயற்சி

May 02, 2024 6:31 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்ன தின்னூர் என்ற கிராமத்தில், வீடு ஒன்றில் தனியே இருந்த சிறுமியை திசை திருப்பி கேழ்வரகு மூட்டையை திருடி ஆட்டோவில் ஏற்ற முயன்ற 3 பெண்களை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் மூவரும் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், கோவிலில் அன்னதானம் வழங்க உள்ளதாக கூறி கிராமம் கிராமமாக சென்று உணவு தானியம் சேகரித்து வருவது தெரிய வந்தது..