​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மத்திய அரசை மதிக்கவில்லை: துரைமுருகன்

Published : May 01, 2024 10:01 AM

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மத்திய அரசை மதிக்கவில்லை: துரைமுருகன்

May 01, 2024 10:01 AM

உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் மே தின நினைவுச் சின்னத்திற்கு அமைச்சர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ச துரைமுருகன், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மத்திய அரசை மதிக்கவில்லை என்றும் அதனை உச்சநீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் கூறினார்.