​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 வயது மகனை பார்க்க சென்ற போது இளைஞர் மீது தாக்குதல் என புகார்

Published : May 01, 2024 7:40 AM

4 வயது மகனை பார்க்க சென்ற போது இளைஞர் மீது தாக்குதல் என புகார்

May 01, 2024 7:40 AM

கன்னியாகுமரியில் தனது மகனை அடித்து சித்ரவதை செய்த பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளைஞரின் தாயார் நாகர்கோவில் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் பிபின் பிரியன் என்பவர், பிலாங்காளையில் உள்ள மனைவி வீட்டில் இருக்கும் தனது 4வயது மகனைப் பார்க்க சென்றபோது அவரது மைத்துனர்கள் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அடிபட்டு சிகிச்சையில் இருக்கும் தனது மகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பதாக பிபின் பிரியனின் தாயார் தெரிவித்தார்.