​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடத்தை சந்தேகத்தால் மனைவியை கொன்ற மத போதகர்

Published : May 01, 2024 7:22 AM

நடத்தை சந்தேகத்தால் மனைவியை கொன்ற மத போதகர்

May 01, 2024 7:22 AM

சென்னையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய கிறித்தவ தேவாலய உதவி ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

பொன்மாரைச் சேர்ந்த விமல்ராஜ், மனைவி வைசாலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, தகராறின் போது வைசாலியின் வாயில் துணியைச் சுற்றி கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வைசாலியின் நண்பர் ஒருவரை வரவழைத்த விமல்ராஜ் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் வழியிலேயே மூச்சுத்திணறலால் வைசாலி இறந்தது போல் நாடகமாடி சடலத்தை சொந்த ஊரான ஒட்டியம்பாக்கம் எடுத்து சென்றுள்ளார்.

வைசாலியின் முகம், கழுத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட உறவினர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து சடலத்தை தாழம்பூர் போலீஸார் கைப்பற்றினர்.