​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேல்மலை கிராம வனப்பகுதிகளில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ

Published : May 01, 2024 6:23 AM

மேல்மலை கிராம வனப்பகுதிகளில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ

May 01, 2024 6:23 AM

கொடைக்கானல் மேல்மலை கிராம வனப்பகுதிகளிலும், தனியார் தோட்டப்பகுதிகளிலும் 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருவதால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல இன்றும் நாளையும் தடை விதிப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தீயை அணைக்க தண்ணீர் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதால் தற்காலிகமாக தடை விதித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.