​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடி வரும் உத்தரகாண்ட்... கடந்த 24 மணி நேரத்தில் பொசுங்கிய 78 ஹெக்டேர் காடு

Published : Apr 30, 2024 4:17 PM

காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடி வரும் உத்தரகாண்ட்... கடந்த 24 மணி நேரத்தில் பொசுங்கிய 78 ஹெக்டேர் காடு

Apr 30, 2024 4:17 PM

காட்டுத் தீயை கட்டுப்படுத்த உத்தரகாண்ட் மாநிலம் தொடர்ந்து போராடி வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இதில் 78 ஹெக்டேர் பரப்பளவுள்ள அடர்ந்த வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், நைனிடால் போன்ற சுற்றுலா தலங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஜய் பட் கூறினார். 30 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினரும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.