​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனையில் அறைக்கலன்களை அடித்து உடைத்த நபரை பிடித்துச் சென்ற போலீசார்

Published : Apr 30, 2024 2:50 PM

அரசு மருத்துவமனையில் அறைக்கலன்களை அடித்து உடைத்த நபரை பிடித்துச் சென்ற போலீசார்

Apr 30, 2024 2:50 PM

மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குள் நள்ளிரவில் புகுந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான வடிவேலு என்பவர், மது போதையில் அங்கிருந்த அறைக் கலன்களை அடித்து உடைத்துவிட்டு நோயாளிகள் காத்திருப்பு அறையில் நடனம் ஆடினார்.

இதைப் பார்த்து பணியில் இருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வெளியே ஓடி தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் சென்று வடிவேலுவை கைது செய்தனர். அவர் மனரீதியாக பாதிப்படைந்துள்ளதால் கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்துக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்