​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
80 வயது மூதாட்டியை தூக்கி வீசிய கல் நெஞ்சம் படைத்த வாரிசுகள் காரில் வந்து சாலையோரம் தள்ளினர்..! எல்லாருக்கும் முதுமை வரும் மறந்துடாதீங்க..!

Published : Apr 30, 2024 10:07 AM



80 வயது மூதாட்டியை தூக்கி வீசிய கல் நெஞ்சம் படைத்த வாரிசுகள் காரில் வந்து சாலையோரம் தள்ளினர்..! எல்லாருக்கும் முதுமை வரும் மறந்துடாதீங்க..!

Apr 30, 2024 10:07 AM

சேலம் அருகே  80 வயது மூதாட்டியை மகன் மற்றும் பேரன் ஆகியோர் காரில் அழைத்து வந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உயிரோடு வீசிச்சென்ற நிலையில் அவரை மீட்ட வாகன ஓட்டிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சுமார் 80 வயது மூதாட்டி ஒருவர் நடுரோட்டில் கிடந்தார்.

வாகன ஓட்டிகள் சிலர் மூதாட்டியை மீட்டு சாலையின் ஓரமாக கொண்டுவந்து படுக்க வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் பகுதியைசேர்ந்த அந்த மூதாட்டியின் மகன் பால்சாமியும், பேரன் தனசேகரனும் காரில் வந்து வீசிச்சென்றதாக தெரிவித்தார்

இது குறித்து வாழப்பாடி போலீசாருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூதாட்டியை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

"பெத்தமனம் பித்து" "பிள்ளை மணம் கல்லு" என்பது போல சாலையில் குப்பையை போல வீசிச்சென்றவர்கள் உணர வேண்டியது ஒன்றுதான் எல்லாருக்கும் முதுமை வரும்..! மறந்து விடாதீர்கள்..!