​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செம்மண் கடத்திய லாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.. வழக்குப்பதிவு செய்யாமல் லாரிகள் விடுவிக்கப்பட்டதாக புகார்

Published : Apr 30, 2024 6:29 AM

செம்மண் கடத்திய லாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.. வழக்குப்பதிவு செய்யாமல் லாரிகள் விடுவிக்கப்பட்டதாக புகார்

Apr 30, 2024 6:29 AM

குளித்தலை அருகே செம்மண் கடத்திய லாரிகளை பிடித்து ஒப்படைத்தும், போலீசார் விடுவித்ததாகக் கூறி பாலவிடுதி காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மாவத்தூர் ஊராட்சியில் உள்ள குளத்தில் இருந்து சட்டவிரோதமாக வண்டல் மண் மற்றும் செம்மண் ஏற்றிச் செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த போலீசார், செம்மண் கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.