​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவிலில் வாடகைக்கு வீடு கேட்பது போல் வந்து மூதாட்டியிடம் 10 சவரன் தாலிச் செயின் பறிப்பு

Published : Apr 29, 2024 8:59 PM

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவிலில் வாடகைக்கு வீடு கேட்பது போல் வந்து மூதாட்டியிடம் 10 சவரன் தாலிச் செயின் பறிப்பு

Apr 29, 2024 8:59 PM

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவிலில் வாடகைக்கு வீடு கேட்பது போல் வந்து ஓய்வு பெற்ற வங்கிப் பணியாளரின் மனைவியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை அன்று வந்து வீட்டைப் பார்த்துவிட்டு சென்ற அந்நபர், சனிக்கிழமை அதிகாலை ராஜாராம் வீட்டில் இல்லாத நேரத்தில் மீண்டும் வந்து எதிர்பாராத நேரத்தில் தன்னை கீழே தள்ளி செயினை பறித்து சென்றதாக அவரது மனைவி லஷ்மி கண்ணீர் மல்க தெரிவித்தார்.