​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் நீரை சேமிக்க தவறிய அரசு: கடம்பூர் ராஜு

Published : Apr 29, 2024 8:31 PM

தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் நீரை சேமிக்க தவறிய அரசு: கடம்பூர் ராஜு

Apr 29, 2024 8:31 PM

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத அளவு மழை பெய்தபோதிலும், நீரை சேமித்து வைக்க தவறியதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

ஓட்டப்பிடாரம் பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தலை திறந்து வைத்த பிறகு பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த குடிமராமத்து பணிகளை திமுக அரசு கைவிட்டிருக்கக் கூடாது என்றார்.