​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ள மதுவிற்பனை குறித்து போலீசில் புகார் தெரிவித்தவருக்கு மிரட்டல்?

Published : Apr 29, 2024 10:43 AM

கள்ள மதுவிற்பனை குறித்து போலீசில் புகார் தெரிவித்தவருக்கு மிரட்டல்?

Apr 29, 2024 10:43 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், தன் தொலைபேசி எண்ணை மது விற்பவர்களிடம் போலீசாரே தந்துவிட்டதாகவும் கூறி மீண்டும் 100க்கு போன் செய்து ஒருவர் புலம்பிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஜேசுதாஸ் என்ற அந்த நபர் உயிருக்குப் பயந்து தாம் தோப்புக்குள் பதுங்கி இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஓசியில் மது கொடுக்காததால் ஜேசுதாஸ் பொய் சொல்லி இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தையில் மது விற்றவர்களையும் கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.