​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தினருடன் மலையேறிச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

Published : Apr 29, 2024 10:33 AM

குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தினருடன் மலையேறிச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

Apr 29, 2024 10:33 AM

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த டி.சி.குப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சத்யா, மனைவி மற்றும் இரு மகன்களுடன் நத்தம் பகுதியில் மலைமேல் உள்ள குலதெய்வமான மூங்கிவாழி அம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த நடந்து சென்றுள்ளார்.

வழியில், கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்த 14 வயது மூத்த மகன் அர்ஷன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.