​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூலாம்பட்டி தடுப்பணையில் பச்சை நிறமாக மாறியுள்ள காவிரி ஆற்று நீர்

Published : Apr 29, 2024 7:40 AM

பூலாம்பட்டி தடுப்பணையில் பச்சை நிறமாக மாறியுள்ள காவிரி ஆற்று நீர்

Apr 29, 2024 7:40 AM

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றில் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் கடந்த சில நாட்களாக பச்சை நிறமாக மாறி இருக்கிறது.

துர்நாற்றமும் வீசுவதாகவும், பூலாம்பட்டி படகுத் துறையின் சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.