​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ள மதுவிற்பனை குறித்து போலீசில் புகார் தெரிவித்தவருக்கு மிரட்டல்.. காவல்துறையினரே காட்டிக்கொடுத்து விட்டதாகக் கூறி புலம்பிய ஆடியோ

Published : Apr 28, 2024 8:00 PM

கள்ள மதுவிற்பனை குறித்து போலீசில் புகார் தெரிவித்தவருக்கு மிரட்டல்.. காவல்துறையினரே காட்டிக்கொடுத்து விட்டதாகக் கூறி புலம்பிய ஆடியோ

Apr 28, 2024 8:00 PM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும்,

தன் தொலைபேசி எண்ணை மது விற்பவர்களிடம் போலீசாரே தந்துவிட்டதாகவும் கூறி மீண்டும் 100க்கு போன் செய்து ஒருவர் புலம்பிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறை காவலரிடம் பேசியுள்ள கண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர், தன் பகுதியில் மது விற்பதை தடுக்கவேண்டும் என்றும், அதே சமயம் தன் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.