​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்தை அமெரிக்காவால்தான் நிறுத்த முடியும்".. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்த பாலஸ்தீன அதிபர் வேண்டுகோள்

Published : Apr 28, 2024 7:53 PM

"ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்தை அமெரிக்காவால்தான் நிறுத்த முடியும்".. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்த பாலஸ்தீன அதிபர் வேண்டுகோள்

Apr 28, 2024 7:53 PM

காஸா எல்லைப் பகுதியில் உள்ள ரஃபா நகரின் மீது இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதலை அமெரிக்காவால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும் என பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய அவர், ரஃபா மீது தாக்குதல் முடிவைக் கைவிடும்படி இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்தக் கேட்டுக்கொண்டார்.

ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அப்பகுதியில் இருந்து ஏராளமான பாலஸ்தீனர்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்றும், அது பாலஸ்தீன வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றும் மெஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.