​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செக் மோசடி வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

Published : Apr 28, 2024 6:57 AM

செக் மோசடி வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

Apr 28, 2024 6:57 AM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரிசி வியாபாரத்தில் வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனுக்கு காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்நாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் இருந்ததை அடுத்து பிடியாணை வழங்கி கிராமிய காவல் நிலைய ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டதால் பெங்களூரில் பதுங்கியிருந்த செந்தில்நாதனை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்தனர்.