​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி செல்லாத 14 வயதுக்கு மேற்பட்டோரின் கல்விக்கு உதவிய நிலவொளி பள்ளி

Published : Apr 28, 2024 6:38 AM

பள்ளி செல்லாத 14 வயதுக்கு மேற்பட்டோரின் கல்விக்கு உதவிய நிலவொளி பள்ளி

Apr 28, 2024 6:38 AM

காஞ்சிபுரத்தில் பள்ளிக்கு செல்லாத 14 வயதுக்கு மேற்பட்டோருக்காக 1998- ஆம் ஆண்டில் அன்றைய ஆட்சியர் வெ.இறையன்புவால் தொடங்கப்ப்பட்ட நிலவொளிப் பள்ளியில் இதுவரை 20ஆயிரத்து 731 பேர் கல்வி பயின்றுள்ளனர்.

இங்கு படித்த 47 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணி பெற்றுள்ளனர்.

இளையராஜா என்பவர் குருப்-1 தேர்வில் வென்று காவல் துணை கண்காணிப்பாளராக உள்ளார்.

நிலவொளி பள்ளியில் பயின்று பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களை முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு சந்தித்து கலந்தாலோசனை செய்தார்.